நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிரேசில் நாட்டு பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை…!!!
பிரேசில் நாட்டு பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த நபர் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த வந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இவருக்கு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த குற்றவாளி இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.