டி-20 போட்டியில் இருந்து விலக்கப்பட்ட ஆவுஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை..!!!
இலங்கைக்கு எதிரான மூன்று தொடர்கள் கொண்ட டி-20 போட்டியில் இருந்து ஆவுஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை விலக்கப்பட்டுள்ளார்.
ஆவுஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டைன் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியில் இருந்து விலக்கப்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் பயிற்சியின் போது தனது வலது முழங்கையில் காயம் ஏற்பட்ட காரணமாக மூன்று தொடர்களில் இருந்து டை வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது. டைவுக்கு பதிலாக ஒரு மாற்று வீரர் எதிர்வரும் நாட்களில் பெயரிடப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், பில்லி ஸ்டான்லேக் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகிய வீரர்களுடன் வலுவாக உள்ள அவுஸ்திரேலிய அணி, இலங்கைக்கு கடும் சவாலதக உள்ளது என கூறப்படுகின்றது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து ஆண்ட்ரூ டை விலகினாலும் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதையடுத்து, இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆரம்ப ஆட்டகாரராக பிஞ்ச் களமிறங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.