மழை காரணமாக இடை நிறுத்திய இந்தியா vs தென் ஆப்பிரிக்கா முதல் டி-20 போட்டி..!!!
கனமழை காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி இடை நிறுத்தியுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு டி-20 உலக கிண்ணைத் தொடருக்கு தயாராகும் நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து பல்வேறு தொடர்களில் மோத உள்ளது. இதன் முதல் கட்டமாக தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஆட்டங்கள் கொண்ட போட்டி நடைபெறுகிறது.
அந்த வகையில் இதன் முதல் ஆட்டம் தர்மசாலாவில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறுவதாக இருந்தது. இரவு 7 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தர்மசாலாவில் தொடர்ந்து கனமழை பெய்ததால் ஹிமாசலப்பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்ததால், டாஸ் போடுவது தாமதமானது.
களப் பணியாளர்கள் தொடர்ந்து மைதானத்தில் தேங்கி இருந்த நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டார். ஆனால் மழை விடாத காரணத்தால் அவரின் பணியும் பாதிக்கப்பட்டது. நடுவர்கள் ஆய்வு செய்த போது மழை பாதிப்பால் தொடர்ந்தும் இந்த போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது .இதனால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் இந்த போட்டி முழுமையாக கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர்.