கொழும்பிற்கு வரும் அனைத்து மக்களுக்கும் ஒரு முக்கிய அறிவித்தல்…!!!
இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பல பகுதிகளில் மழை செய்து வருகின்றது. இந்த மழையின் சீற்றம் காரணமாக சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அந்த வகையில் கொழும்பு, கொட்டாஞ்சேனை- ஆமர் – பாபர் சந்தி முழுமையாக வெள்ள நீரில் முற்றாக மூழ்கிய நிலையில் அங்கு வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். இந்த வெள்ளம் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் பொது மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கொட்டாஞ்சேனை- ஆமர் – பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் பாபர் வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொட்டாஞ்சேனை முதல் புறக்கோட்டை நவலோக சந்தி வரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக புறக்கோட்டை, டாம் வீதி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். குணசிங்கபுர தனியார் பேருந்து நிலையப் பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளனர்.