காட்டு யானை தாக்கி மாணவன் ஒருவர் படுகாயம்…!!!
மஹியங்கனையில் இன்று காலை பாடசாலை மாணவன் ஒருவனை காட்டு யானை தாக்கியுள்ளது. இந்த மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மஹியங்கனை, மாபாகடவெவ பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவனே இந்த யானை தாக்குதலுக்கு இலக்கனார். இந்த மாணவன் பாடசாலை சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென வீதிக்கு வந்த காட்டு யானை மாணவனை தும்பிக்கையால் தூக்கி வீசியுள்ளது.
இதேவேளை, அரலகங்வில, வராபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரும் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.