உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த போது உள்ளாடையில் டிஷ்யூ பேப்பரை வைத்து விளையாடியதாக மனம் திறந்து கூறிய சச்சின் டெண்டுல்கர்…!!!
இந்தியாவின் தலை நகரான புது டெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக விளையாடியதை என்னால் மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் என்னால் நிற்க கூட முடியவில்லை, உடல் தகுதி நிபுணர் ஆண்ட்ரூ லீபஸின் அறிவுறுத்தலின் பேரில் விளையாடினேன். ஒரு கட்டத்தில் என்னால் இயலாமல் போன நிலையில் உப்பு நீரை குடித்து விளையாடினேன்.
அதே போல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் கடுமையான வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டேன். என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளாடையில் டிஷ்யூ பேப்பர்களை வைத்துக் கொண்டு களமிறங்கி விளையாடினேன். இதனால் மிகவும் கஷ்டப்பட்டாலும் நாட்டுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன் என தெரிவித்துள்ளார்.