பொருள்களை வாங்குவது, சமைப்பது, உட்கொள்வது போன்றவை சிங்கப்பூர்வாசிகளில் அதிகமானோர் உணவு வீணாவதைக் குறைக்க நடவடிக்கை….!!
சிங்கப்பூரில் பொருள்களை வாங்குவது, சமைப்பது, உட்கொள்வது போன்றவை தொடர்பில் அந்நாட்டில் உள்ளவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. தேசியச் சுற்றுப்புற அமைப்பு, உணவை வீணாக்கும் பழக்கம் இந்த சிங்கப்பூரர்களின் மனப்போக்கை அறியும் நோக்கில் நடத்திய கருத்தாய்வில் இது தெரியவந்தது.
ஆய்வு முடிவு ஊக்கமளிப்பதாகவும், பல்வேறு தரப்பினருக்கு இடையில் உணவை வீணாக்கும் போக்கு குறைந்து வருவதைக் காட்டுவதாகவும் கூறப்பட்டது. இந்த வருடம் மார்ச் மாதத்திற்கும், ஏப்ரல் மாதத்திற்கும் இடையே கருத்தாய்வு நடத்தப்பட்டது. ஆயிரம் பேரிடம் நேருக்கு நேர் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
மீதமான உணவைக் குளிர்பதனப் பெட்டியில் வைப்பது, வெளியில் சாப்பிடும்போது தட்டில் மிச்சம் வைக்காமல் உட்கொள்வது, மீதமான உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்வது போன்றவற்றை அதிகமானோர் கடைப்பிடிக்கின்றனர். 3 விழுக்காட்டுக் குடும்பங்கள், வீணாகும் உணவை இயற்கை உரமாக மாற்றுவதில் ஈடுபடுகின்றன. எனினும் அதன் தொடர்பில் மக்கள் மேம்படுத்திக்கொள்ள இடமிருப்பதாகவும் அமைப்பு தெரிவிக்கப்பட்டது. மளிகைச் சாமான்களைத் தேவைக்கு அதிகமாக வாங்குவது போன்றவற்றை அது சுட்டியுள்ளது.
குடும்ப உறுப்பினர்களுக்கு, உணவில் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையே பெரும்பாலும் அதற்கான காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. சிங்கப்பூரில் சென்ற வருடம் 763,000 டன்னுக்கும் அதிகமான உணவுக் கழிவு உருவானது. அதற்கு முந்தைய வருடம் அந்த அளவு சுமார் 810,000 டன்.