இலங்கை அம்பாறையில் பஸ்சை மறித்துத் தாக்கிய குழுவினர் தப்பியோட்டம்.
இலங்கை அம்பாறையின் காரைதீவுப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து ஒன்றை மறித்த குழுவினர் அதில் பயணம் செய்த மக்கள், சாரதி மற்றும் நடத்துநர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்ற குழுவினர் மதுபோதையில் இருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் அரை மணிநேரத்திற்கும் அதிகமாக பஸ்சை மறித்து வைத்திருந்த அவர்கள் பஸ்சில் பயணித்த மக்களின் கைத்தொலைபேசிகளையும் பறித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கவே அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.