ரஷ்யாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த விசேட விமானம்..!!
ரஷ்யாவில் இருந்து வந்த விசேட விமானம் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் ரஷ்யாவில் சிக்கியிருந்து இலங்கையர்களை மீட்டு வருவதற்காக சென்றிருந்தது. அதன்படி 206 இலங்கையர்களுடன் குறித்த விமானம் தரையிறங்கியுள்ளது.
அண்மைக்காலமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.