இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று!
இலங்கையில் புதிதாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1078 ஆக உயர்ந்துள்ளது.
இது விரையில் 660 பேர் குணமடைந்துள்ளதுடன் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி ஊரடங்குச் உத்தரவு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.