நாட்டின் காலநிலை மாற்றத்தால் 7 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை!
கடும் மழை காரணமாக 7மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவிற்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
கண்டி, மாத்தளை, கேகாலை, குருணாகல், காலி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழான மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.க முடியாது என்று சீனா கூறியுள்ளது.