கோத்தபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு எவ்வித சட்ட சிக்கல்களும் இனி கிடையாது – செஹான் சேமசிங்க
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பாக
கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதற்கு எவ்வித சட்ட சிக்கல்களும் இனி கிடையாது என செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.
இன்று முதல் தேர்தல் வெற்றிக்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கவில்லை.
இலங்கை அரசியலின் சூழ்ச்சியில் இருந்து எதிரணியை பாதுகாத்துக் கொள்ளவே அவர் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.