ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரச்சார கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்சான் உரை..!!
2015 ஆம் ஆண்டு செய்த அதே தவறுகளை மக்கள மீண்டும் செய்யக்கூடாது என முன்னாள் வீரர் தில்சான் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்சான் உரையாற்றியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாததால் மக்கள் ஏமாற்றப்பட்டனர் என தில்சான் கூறியுள்ளார். கோத்தாபய ராஜபக்ச இராணுவத்தில் இணைந்த வேளை எப்படி இந்த நாட்டை நேசித்தாரோ அது போலவே இன்றும் நாட்டை நேசிக்கின்றார் என தில்சான் தெரிவித்துள்ளார்.
நாட்டையும் எதிர்கால தலைமுறையையும் பாதுகாப்பதற்காக நாட்டை கோத்தாபயரஜபக்சவிடம் கையளிக்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.