பாகிஸ்தானின் பொலிஸ் மா அதிபர் மொஹமட் அமீர் சுல்பிகர்கான் விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!
பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அதியுட்ச பாதுகாப்பினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் மா அதிபர் மொஹமட் அமீர் சுல்பிகர்கான் அறிவித்துள்ளார்.
இந்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியானது ராவல்பிண்டியிலும், கராச்சியலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது. மேலும் இந்த நிலையில் பாகிஸ்தானின் பொலிஸ் மா அதிபர் மொஹமட் அமீர் சுல்பிகர்கான் தலைமையில் இடம்பெற்ற இந்த சுற்றுப் பயணம் தொடர்பான பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் போது இந்த முடிவு உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தியோகபூர்வ கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு செல்லு இலங்கை கிரிக்கெட் அணிக்கான பாதுகாப்பு தொடர்பில் மறு ஆய்வு செய்யப்பட்டதுடன், இராணுவ கமாண்டோக்களை அணியின் பாதுகாப்புக்காக சேவையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இலங்கை அணியினர் பாகிஸ்தானில் தங்கியுள்ள ஹோட்டல்களிலும், விளையாடும் மைதானங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டமும் தடை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் பாகிஸ்தானின் இந்த இலங்கை அணிக்கான அதியுச்ச பாதுகாப்பு தொடர்பில் அந்நாட்டு ஊடகங்களில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.