நான் மீண்டும் வந்துவிட்டேன்.! கோத்தபாய ராஜபக்ஷ வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு…!!
ஸ்ரீலங்காவில் இடம்பெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு எனக்கு இந்தவொரு தடைகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறுகையில் தான் ஏற்கனவே அமெரிக்கா குடியுரிமையை இழந்துள்ளதோடு , தற்போது இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சிலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் அவர் கூறினார். இந்த வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.