கொரோனா வைரஸ் தொடர்பாக அறிவதற்கு பயன்படும் ஆரோக்ய சேது செயலி..!!
உலகையே அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொடர்பாக அறிவதற்கு மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நான்கு நாட்களில் 50 லட்சத்திற்கு மேலானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஸ்மார்ட்போனிலுள்ள இருப்பிடம் காட்டும் வசதி மற்றும் ப்ளூடூத்தை இயக்கிவிட்டு, இச்செயலியை திறந்தால் நாம் இருக்கும் இடங்களில் கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது உள்ளார்களா என பாவனையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.
இது போன்ற நிலையில், கடந்த 2 ஆம் திகதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை, ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.