இன்றைய ராசி பலன் – 28.12.2020
இன்றைய பஞ்சாங்கம், 28-12-2020, மார்கழி 13, திங்கட்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சதுர்த்தசி திதி. ரோகிணி நட்சத்திரம் பகல் 03.39 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 03.39 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:
நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். பயணங்கள் சிறப்பாக அமையும்.
ரிஷப ராசி அன்பர்களே:
குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள் வார்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
மிதுன ராசி காரர்களே:
பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியே ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம்.தாய்வழி உறவி னர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.எதிர்பாராத உதவிகள் நண்பர்களால் கிட்டும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும்.குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும்.
கடக ராசி நேயர்களே:
பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.சிலருக்கு வீண் செலவுகள் ஏற்ப டும்.குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். குடும்பப் பொறுப்புகளின் காரண மாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே:
நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்தவர்கள் மனசு மாறும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.
கன்னி ராசி காரர்களே:
புது ஏஜென்சி எடுப்பீர்கள்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
துலாராசி உறவுகளே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான்.சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:
உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.
தனுசு ராசி அன்பர்களே:
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும்.
மகர ராசி காரர்களே:
நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
கும்ப ராசி உறவுகளே:
கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். உறவினர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.
மீன ராசி நேயர்களே:
பேச்சில் கம்பீரம் பிறக்கும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.