இன்றைய ராசி பலன்! 18 .10.2019
புரட்சி உறவுகளே இனிய காலை வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
18.10.2019 ஐப்பசி மாதம் 01 ஆம் நாள் வெள்ளிக்கிழமையாகும். சதுர்த்தி காலை 6.09 வரை பஞ்சமி பின் இரவு 5.39 வரை ரோகிணி,மரண பின் பகல் 4.09 வரையாகும். சுப நேரம் காலை 6.02 – 7.32 வரையாகும். எமகண்டம் மதியம் 3.02 – 4.32 வரையாகும். இராகுகாலம் காலை 10.32 – 12.02 வரையாகும். குளிகன் காலை 7.32 – 9.02 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புதிய வீடு வாங்குவீங்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். இன்றைய நாள் நிம்மதியான நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: உங்கள் ராசியில் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம்பொறுமையை இழப்பீர்கள். நண்பர்களிடம் உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்தியோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. மன உறுதி அதிகரிக்கும். நம்பி வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர முடியும். இன்றைய நாள் அலைச்சல் அதிகரிக்கும் நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். பழைய பிரச்சினைகள் மனதில் வருடி கொண்டுயிருக்கும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். குடும்ப வரவு செலவை சரி பார்ப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றினாலும் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும். உடல் நலம் மேம்படும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். சோர்வு நீங்கி உற்சாகமாக செயல்பட முடியும். சகோதரர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் புது அனுபவம் உண்டாகும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களை வெற்றியுடன் முடிக்கும் ஆற்றலும், திறனும் இருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.
துலாராசி உறவுகளே: உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங் கள் ஏற்படக்கூடும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டிவரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மருத்துவ செலவு ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் வேலைச்சுமை மிகுந்த நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம்பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்க ளுக்கு உதவுவீர்கள். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். சகோதரர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவிசெய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங் களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். தாயின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புத்தி கூர்மையால் எதிலும் ஜெயிக்க முடியும். கணவன் மனைவிடையே நல்ல அனுசரணை இருக்கும். மற்றவர்களுடன் பழகும்போது கவனமாக இருப்பது நல்லது. இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமை யும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வீடு மாற்றம் ஏற்படும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாட வேண்டிவரும். எதிர்கால வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.
மீன ராசி நேயர்களே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்கு கள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு. புது நபர்கள் யாரையும் நம்பி ஏமாறவேண்டாம். இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.