இலங்கை பேஸ்புக் பாவனையாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கை..!!!
இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்கள் வெளியிட்டு மக்களை பிழையாக வழிநடத்தல் மற்றும் குழப்பம் ஏற்படுத்தும் நபர்களை கண்காணிக்கப்படவுள்ளது.
நீதிக்கு எதிராக நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு ஊடாக இலங்கை பேஸ்புக் அதிகாரிகளிடம் அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.