நொடியில் பெண்களை அழகுப் படுத்தும் தக்காளி மற்றும் எலுமிச்சை..! அதிகம் பகிருங்கள்…!!
அழகாக இருக்க ஆண் பெண் இரு பாலருமே விரும்புவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் தங்களை கவனித்துக் கொள்ள நேரம் இருக்காது. ஒரு சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று தங்களை அழகு படுத்திக் கொள்வார்கள் எல்லோராலும் அது முடிவதில்லை.
ஒரு சிலரிடம் அந்த அளவிற்கு பணம் இல்லை. ஒரு சிலருக்கு நேரம் இல்லை. இதனால் இன்று நாம் பார்க்கப் போவது இலகுவான முறையில் சில அழகு குறிப்புகளை தான். சிலருக்கு மூக்கு பகுதியில் கறுப்பு கறுப்பாக அசிங்கமாக இருக்கும்..
இதனை நீக்க எலுமிச்சை பாதியை எடுத்து அதன் சாறை எடுத்துவிட்டு அந்த தோலால் மூக்கு பகுதியை 2 தொடக்கம் 5 நிமிடம் வரை மசாஜ் செய்து சில நிமிடங்கள் விட்டு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் போதுமானது. அடுத்து திருமணம் அல்லது விஷேடங்கள் என்றால் தக்காளி பாதியை எடுத்து வெள்ளை சீனியில் தொட்டு முகத்தில் மசாஜ் செய்யுங்கள்…
5 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் அப்படியே 10 நிமிடம் விட்டு பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 1 நாளைக்கு 2 முறை என மூன்று நாட்கள் செய்தால் போதும் கல்யாணத்திற்கு தயாராகி விடலாம்..! தினமும் ஐஸ் கட்டியால் முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள தூசிகள் நீங்கி எப்போதும் பிரஷ்ஷாக இருக்கலாம்..!