டுவிட்டரால் காப்பாற்றப்பட்ட சிறுமிகள்! கடத்தலை முறியடித்த டுவீட்!
தகவல் தொழில் நுட்பங்களை எது எதற்கோ பயன்படுத்தி சீரழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில் டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் கடத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த 26 சிறுமிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் முஸாபர்பூர் அபுபந்த்ரா விரைவு ரயிலில் 26 சிறு பெண்பிள்ளைகள் கடந்த சனிக்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். அதே ரயிலில் பயணித்த ஆதர் ஸ்ரீவஸ்தர் என்பவர் இதை அவதானித்துள்ளனர்.
அந்தப் பெண்பிள்ளைகள் அழுதுகொண்டிருந்ததை பார்த்த அவருக்கு சந்தேகம் ஏலவே அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரிகளை டாக் செய்து டுவீட் உரையொன்றா எழுதியுள்ளார். இந்த டுவீட் ஆனது அதிகாரிகளை சென்றடையவும் செய்தது. இதனைத் தொடர்ந்து மாறுவேடத்தில் ரயிலில் நுழைந்த அதிகாரிகள் சிறுமிகளை மீட்டதோடு சம்பவம் தொடர்பில் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவத்தை உலகரியச் செய்த அந்த டுவிட்டர் வாசி உண்மையில் பாராட்டுக்குரியவர்.
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்