இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இன்று நேரில் சந்திப்பு..!!
இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக நேற்று இரவு வந்தார்.
மேலும் அவரின் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தின் கட்டுப்பாடுகளை தவிர்க்க வேண்டும், ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதையும் தவிர்க்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ முன்வைத்தார்.
மேலும் இந்த சந்திப்பில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஜப்பானில் இந்த வாரம் நடைபெறவுள்ள G20 மாநாட்டில் சந்தித்து பேசவுள்ளார். மேலும் இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் இரு தரப்பு உறவையும் மேன்படுத்துவதாகும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.