உணவை வீணாக்கினால் சிறை தண்டனை.! அத்துடன் பல நாட்கள் உணவு கொடுக்கப் பட மாட்டாது.! மக்களே எச்சரிக்கை.!!
உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களும் விசித்திரமாக பார்க்கும் நாடு என்றால் அது வட கொரியா தான். இங்கு ஹிட்லர் ஆட்சியா? இடி அமீன் ஆட்சியா அல்லது அனைத்தும் கலந்த ஆட்சியா என யாராலும் சரியாக கூறமுடியாத ஆட்சி நடக்கிறது என்றால் அது வட கொரியாவில் தான். அந்த நாடு எப்படி இருக்கிறது அங்கு என்ன சிறப்பு என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.
மக்களை பொறுத்த வரையில் வட கொரியா என்றால் ஆயுதங்கள், அணுகுண்டு இது தான் மக்களுக்கு தெரியும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் பல மர்மங்கள் இடம்பெற்று வருவதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றது. ஆரம்பத்தில் நாட்டின் அதிபர் இறந்து விட்டதாக கூறப்பட்டது. அதன் பின் கிம் ஜாங் அசால்ட்டாக மீடியாக்கள் முன் தோன்றினார்.
அதன் பின் கொரோனா வைரலாஸ் பாதிக்கப் படுபவர்களை கொலை செய்யப் படுவதாகவும் செய்திகள் வெளியானது. இவை எதுவுமே எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது. இப்படி இருக்கையில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இதில் வட கொரியாவில் தற்போது பஞ்சம் நிலவுவதாக கூறப்படுகின்றது.
இதனால் பட்டினியால் ஒரு பக்கம் மக்கள் வாடிக்கொண்டிருக்க இன்னுமொரு பக்கம் மக்கள் உணவுகளை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை விட்டுத்துள்ளது. உணவை வீணாக்கினால் அவர்களுக்கு மிக கொடுமையான தண்டனை கொடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. உணவை வீணாக்கினால் பல நாட்கள் உணவு கொடுக்காமல் சிறையில் அடைக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.!