சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்திய துருக்கி..! 16 பேர் பலி..!
கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் ஆரம்பித்த உள்நாட்டுப்போரானது உச்சகட்டத்தை அடைந்த வருகின்றது. குர்தீஷ் போராளிககு இடையில் கட்டுப்பாட்டில் இருந்து வந்த சிரியாவின் பல பகுதி மற்றும் சிரிய அரசு படைகள் அனைத்தும் தங்கள் வசத்தில் கைப்பற்றியுள்ளது. இது மட்டும் இன்றி,சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இட்லீப் மாகாணத்தில் அரசுக்கு எதிரான போராளிகளின் குழுக்கள் மீது ரஷியாவின் இராணுவ உதவியுடன் சிரியா தாக்குதல் முன்னெடுத்து வருகிறது.
குர்தீஷ் போராளிகளும் அடுத்தடுத்த பகுதிகளை கைப்பற்ற துருக்கி ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், உள்நாட்டுப்போர் நடைபெற்று வந்த நேரத்தில், இட்லீப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் இரு நாடுகளும் செயல்பட்டு வருகிறது. இது போர் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு அமைய இருதரப்பிலும் தாக்குதல்கள் மற்றும் பதிலடி தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லீப் மாகாணத்தில் அமைந்துள்ள பாரா மற்றும் பிலியன் பகுதிகளில் சிரியா மற்றும் ரஷிய கூட்டுப்படைகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல் காரணமாக 34 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்நிலையில், தாக்குதல் விசயத்திற்கு பதிலடி தரும் வகையில், இட்லீப் மாகாணத்திலுள்ள சிரிய படைகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் சிரிய அரசபடை வீரர்கள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.