கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்களுடன் சீன மருத்துவ குழு இத்தாலிக்கு விஜயம்..!!!
சீன மருத்துவ குழு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்களுடன் இத்தாலிக்கு சென்றுள்ளது. சீனாவின் வூகான் நகரில் புது அவதாரம் எடுத்த கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸின் சீற்றமும் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது.
தற்போது ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 250 பேர் இத்தாலியில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அங்கு பொது மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் 15க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு இத்தாலி விமான நிலையத்திற்கு விஜயம் சென்றுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான, மருந்து பொருட்களுடன் இத்தாலி சென்ற அவர்கள், கொரோனா பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்தனர். சீன செஞ்சிலுவை சங்கம் சார்பில் இந்த மருத்துவக் குழு இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Chinese medical professionals have arrived in Italy, delivering their expertise and support to the people. My colleague, Chinese Ambassador to Italy, received them at the airport. https://t.co/HUmSP7HINO
— Hua Chunying 华春莹 (@SpokespersonCHN) March 13, 2020