இத்தாலி, தென் கொரியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு விமான சேவை ரத்து செய்த இந்திய..!!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தென் கொரியா, இத்தாலி, குவைத் போன்ற நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ள ஏர்-இந்தியா நிறுவனம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விமான சேவையை குறைத்துள்ளது.
இது தொடர்பாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இத்தாலி, தென் கொரியா, குவைத் போன்ற நாடுகளுக்கு ஏர்-இந்தியா விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, ஸ்பெயின், இஸ்ரேல் ஆகிய 5 நாடுகளுக்கு ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமான சேவையை குறைத்திருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 13ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை அரசு அதிகாரிகள் தவிர மற்ற நபர்களின் விசாக்களை, மத்திய அரசு ஏற்கனவே ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.