ஈரான் மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை..!!
ஈரான் மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஈரானில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை செயற்பாடாக பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன. 8 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக ஈரான் விளங்குகின்றது, இதுவரை 500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர். 11000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பொது மக்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே வர விடாமல் அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி, பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டார்.அதையடுத்து கடைகள், தெருக்களில் ஆள் நடமாட்டம் இல்லாமல் செய்து முழு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 நாள்களில் ஒட்டுமொத்த ஈரானும் கண்காணிக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் வீடு வீடாகச் சென்று யாருக்காவது கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்று சோதனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.