ஈரானின் முதல் துணை ஜனாதிபதி எஷாக் ஜஹாங்கிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று.. !!
ஈரானின் முதல் துணை ஜனாதிபதி எஷாக் ஜஹாங்கிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக ஈரான் ஒயர் செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் ஒயர் வெளியிட்ட செய்தியில், கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொடர்பாக நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டதை அடுத்து எஷாக் ஜஹாங்கிரி நோய் அறிகுறிகளை காட்டினார்.
அதைத் தொடர்ந்து, அவரை சோதனை செய்து பார்த்ததில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அவர் வீட்டிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு குடும்பத்துடன் அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் ஜஹாங்கிரிவுடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் பங்கேற்றுள்ளனர்.
குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட மற்ற 6 அமைச்சர்களுக்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகளை காட்டியதாகவும், எனினும் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்ப்பட்டதா என்பது தொடர்பாக தகவல் தெரியவில்லை என ஈரான் ஒயர் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஈரானின் முதல் துணை ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது தொடரில் ஈரான் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.