ரவி கருணாநாயக்க உட்பட 11 பேர் தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு..!!!
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 11 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி அறிவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் அமைச்சர் ரவி கருணாநாயக்க , அர்ஜீன் அலோசியஸ் உட்பட 12 பேருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக தெரியவருகையில்,
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பெப்பர்ச்சுவல் ட்றெசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அதன் மேலாளர் கசுன் பலிசேன மற்றும் அரச கடன் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரத் சந்ர உள்ளிட்ட சிலரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபரினால், பதில் பொலிஸ்மா அதிபருக்கு நேற்றைய தினம் ஆலோசனை வழங்கப்பட்டது. அதனை சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டவாதி நிஷார ஜயரட்ன தெரிவித்துள்ளார்.