உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரானிய எம்.பி ஃபதேமே ரஹ்பர்…! கொரோனா வைரஸால் கோமாவுக்கு சென்ற பெரும் சோகம்..!!!
ஈரானிய எம்.பி ஃபதேமே ரஹ்பர் கொடிய கொரோனா வைரஸால் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை எம்.பி-யாக பணிபுரிந்துள்ளார். 2020 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நடந்த தேர்தலில் மீண்டும் எம்.பி-யாக தெரிவு செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸால் ரஹ்பர் கோமாவில் இருக்கிறார், தற்போது ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்து வருகிறார் என நிலைமை குறித்த மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 3,513 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிரியாவுக்கு ஈரானின் முன்னாள் தூதரும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப்-ன் முன்னாள் ஆலோசகருமான ஹொசைன் ஷேக்கோலஸ்லாம் கொரோனா வைரஸ் உயிரிழந்துள்ளனர்.