ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுதலை..!!
சீனாவில் பரவ தொடங்கிய கொடிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் மீளுவதும் பரவி அனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. அந்த வகையில் இத்தாலிக்கு அடுத்து ஈரானில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை ஈரானில் 853 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதுடன் 14,991 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கைதிகள் உட்பட சுமார் 85,000 கைதிகளை ஈரான் தற்காலிகமாக விடுதலை செய்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் பாதுகாப்பு தொடர்பான கைதிகள். மேலும் சிறைகளில் நாங்கள் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசின் எஸ்மெயிலி தெரிவித்தார். கடந்த 10 ஆம் திகதி, அதன் நெரிசலான மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட சிறைகளில் இருந்து அனைத்து அரசியல் கைதிகளையும் தற்காலிகமாக விடுவிக்குமாறு ஈரானில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஈரானிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.