அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கலாம் – டொனால்ட் டிரம்ப்
சீனாவின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 1 லட்சத்து 82,000க்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கலாம் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கு இடையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 ,400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.