அமெரிக்காவில் ஊடரங்கு சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது – டோனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் மாகாணங்களிலோ அல்லது மாவட்டங்களிலோ ஊடரங்கு சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம் மட்டும் உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு அதிகம் இருந்த போதிலும் முழு ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தபடாமல் உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசின் மருத்துவ துறை ஆலோசகரும், மூத்த அதிகாரியுமான அந்தோனி பவுசி, முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தால் அதிக உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
அவரின் கருத்தால், ஜனாதிபதிக்கு மாகாணங்களில் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரமுள்ளதா என கேள்வியெழுந்தது. இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டோனால்ட் டிரம்ப், ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் உள்ளதாகவும், இது மாகாண ஆளுநர்களுக்கும் தெரியும் என்றும் கூறினார். ஜனாதிபதி இல்லை என்றால் மாகாணங்கள் மிகப்பெரிய பிரச்னையை சந்தித்திருக்கும் என்ற டிரம்ப், பவுசியை பதவி நீக்கம் செய்ய தமக்கு விருப்பமில்லை என்றும் கூறினார்.
….It is the decision of the President, and for many good reasons. With that being said, the Administration and I are working closely with the Governors, and this will continue. A decision by me, in conjunction with the Governors and input from others, will be made shortly!
— Donald J. Trump (@realDonaldTrump) April 13, 2020