உலக சுகாதார அமைப்புக்கு 30 நாட்கள் கெடு கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி..!! பேரதிர்ச்சியில் உலக நாடுகள்.!
உலக சுகாதார அமைப்பு அடுத்த 30 தினங்களுக்குள் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து முற்றாக விடுபட்டு வெளியே வருவதுடன், கொரோனா வைரஸ் நிலவரத்தை திறமையாக சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளா விட்டால், அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்திவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கொடிய கொரோனா வைரஸ் தொற்று உருவாகியதை மறைத்து சீனாவுக்கு சாதமாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியுதவியை அமெரிக்க ஜனாதிபதி நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், 30 நாட்கள் கெடு வழங்கப்படுவதாகவும் அதற்குள் பாரபட்சம் இன்றி செயல்பட தொடங்கினால் நிதி உதவி மீண்டும் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இல்லை என்றால் அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்திருக்கிறார்.
This is the letter sent to Dr. Tedros of the World Health Organization. It is self-explanatory! pic.twitter.com/pF2kzPUpDv
— Donald J. Trump (@realDonaldTrump) May 19, 2020