துருக்கி நாடாளுமன்றம் 45 ஆயிரம் கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளிப்பு..!!
துருக்கியின் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் என்ற அச்சத்தை தொடர்ந்து சுமார் 45,000 கைதிகளை விடுவிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மசோதாவை ஜனாதிபதி தையீப் எர்டோகன் தாக்கல் செய்துள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 279 எம்.பி.க்களும், எதிராக 51 பேரும் வாக்களித்தனர். அதேவேளை அரசுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
துருக்கியின் திறந்த வெளி சிறைச்சாலைகளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கனோர் அடைக்கப்பட்டுள்ளதால் துருக்கியிலுள்ள 355 சிறைகளும் நிரம்பி வழிந்து உச்சகட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.