ஸ்பெயினுக்கு 15 டன் அளவிலான மருத்துவப் பொருட்களை வழங்கிய சீனா..!!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் ஸ்பெயினுக்கு சுமார் 15 டன் அளவிலான மருத்துவப் பொருட்களை சீனா வழங்கியுள்ளது.
கொரோனா நோயின் தாக்கத்தால் ஸ்பெயினில் இதுவரை 7,700க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்பெயின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபில்ஸ், A 400 ஸ்பெயின் இராணுவ விமானம் நேற்றைய தினம் சீனாவிலிருந்து சுமார் 15 டன் மருத்துவ பொருட்களுடன் சராகோசா விமான நிலையத்திற்கு வந்ததாகக் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்துகள் ஸ்பெயினின் தன்னாட்சித் தீவுப் பகுதிகளுக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தலைநகர் மாட்ரிட்டில் இராணுவப் பொறியாளர்கள் உதவியுடன் அவசரகால மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.