ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 514 பேர் பலி..!!
சீனாவின் ஹவுன் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இந்த வைரஸ் தற்போது சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும். அதன் ஆவேசம் குறிப்பாக இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்து வருகின்றது.
இலங்கையிலும் தற்போது வரை 102 கெரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் தரப்பில், ”ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்புக்கு 514 பேர் உயிரிழந்துள்ளனர்.அதையடுத்து ஸ்பெயினில் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,696 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், 40,000 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய கண்டத்தில் இத்தாலிக்கு அடுத்து வைரஸ் தொற்றால் மோசமான நிலையை ஸ்பெயின் எதிர்கொண்டுள்ளது.