இலங்கையில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலை என்ன?
உலக நாட்டிற்கே தண்ணி காட்டும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக அதிகரித்துள்ளது. தற்போது வரை ஸ்ரீலங்காவில் 102 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இது போன்ற நிலையில் 24.03.2020 மாலை 7.30 வரையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 102 ஆகவும் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 100 ஆகவும் மருத்துவமனையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 229 ஆகவும் தேறியோர் மற்றும் குணமடைந்து வெளியேறியோர் இருவர் ஆகவும் காணப்படுகின்றது. சிகிச்சை பெற்றுவரும் 100 நோயாளர்களுள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.