கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனக்கு அருகில் நின்றவரை சற்று தள்ளி நிற்குமாறு கூறிய நபரை குத்திக்கொலை..!!
கொடிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனக்கு அருகில் நின்றவரை சற்று தள்ளி நிற்குமாறு கூறிய நபரை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹவுன் நகரில் பரவ தொடங்கிய கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், அதில் இருந்து தங்களை தாங்களே தற்காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால், மத மற்றும் மூட நம்பிக்கைகளால் ஆங்காங்கே அத்தகைய வழிமுறைகளைள் பொதுமக்களால் மீறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊட்டியை சேர்ந்த நபர் ஒருவர், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனக்கு அருகில் நின்றவரை சற்று தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மற்றொரு நபர், தன்னை தள்ளி நிற்குமாறு கூறிய நபரை குத்திக்கொலை செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.