கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் அவசரநிலை பிரகடனப்படுத்த தீர்மானம்..!!
ஜப்பானில் கொடிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அவசரகால நிலையை பிரகடனப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுவரை ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றால் 3,600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் தலைநகர் டோக்யோவில் மட்டும் 1000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக வல்லரசு நாடான அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்த பாதிப்பு குறைவு என்றாலும், கொரோனா வைரஸ் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் விதமாக நாளைய தினத்திற்குள் (செவ்வாய்க்கிழமைக்குள்) பிரதமர் அபே அவசரநிலையை பிரகடனப்படுத்த உள்ளதாக ஐப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.