மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தடை விதிப்பு..!!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தடை விதித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
மேலும் இந்த நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவைப்படும் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கும், முக்ககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கும் அமெரிக்காவில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, அந்நாட்டில் தயாரிக்கப்படும் மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.