ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபரின் உதவியாளர் கொரோனா வைரஸால் மரணம்..!!
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அந்நாட்டு ஜனாதிபதி முகமது புஹாரியின் தலைமை உதவியாளர் அபா கியாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கியாரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் சிகிச்சைப் பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் ஜனாதிபதி புஹாரிக்கு அபா கியாரி வலதுகரமாக செயல்பட்டு வந்ததாகக் தெரிவிக்கிறது. அவரையும் சேர்த்து, நைஜீரியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்; 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.