ஷார்ஜாவின் 48 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பெரும் தீ விபத்து..!!
ஷார்ஜாவின் அப்கோ டவர் என்ற 48 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குறித்த கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு தீயணப்பு வீரர்கள் தீயை அணைக்க பலமணி நேரம் போராட்டம் நடத்தினர். பல மணி நேரத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இத் தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. தீயணைப்பு வீரர்கள் உள்பட ஏழு பேர் காயம் அடைந்தனர். தக்க நேரத்தில் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் பல உயிர்கள் பேராபத்தில் இருந்து தப்பியுள்ளன.