2100 ஆம் ஆண்டில் புவி வெப்பநிலை 1.3 மீட்டர் உயர்வு – ஜெர்மனி அறிவியலாளர்கள்
எதிர்வரும் 2100 ஆம் ஆண்டில் புவி வெப்பமடைவதால் கடல்மட்டம் 1.3 மீட்டருக்கு மேல் உயரக் கூடும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். ஜெர்மனியிலுள்ள பருவநிலைத் தாக்க ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட அறிவியலாளர்கள், புவி வெப்பமடைதல் தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் 2100 ஆம் ஆண்டில் புவி வெப்பநிலை இப்போதுள்ளதை விட மூன்றரை டிகிரி செல்சியல் அதிகரித்து, அதன் விளைவாகக் கடல்மட்டம் 130 சென்டிமீட்டர் உயர்ந்துவிடும் எனத் கூறியுள்ளனர்.
எதிர்வரும் 2300 ஆம் ஆண்டில் அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகியவற்றின் பனிப்பாளங்கள் உருகிக் கடல் மட்டம் 5 மீட்டருக்கு மேல் உயரும் என்றும் தெரிவித்துள்ளனர். இப்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் பத்து விழுக்காட்டினர் அதாவது 77 கோடிப் பேர் கடலின் உயர் அலை மட்டத்துக்கு மேல் 5 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.