கொரோனா வைரஸை தடுக்கும் மருந்து தயார்- பீகிங் ஆய்வகம்
உயிரைக் குடிக்கும் கொடிய நோயான கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய மருந்து ஒன்றை கண்டு பிடித்துள்ளதாக சீன ஆய்வகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் பல நாடுகளும், ஆய்வகங்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் சீனாவின் புகழ் பெற்ற பீகிங் பல்கலைக்கழக மரபியல் ஆய்வுத் துறையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பு மருந்தை கொடுப்பதன் மூலம் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைவதுடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான குறுகிய கால நோய்எதிர்ப்புத் திறனும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதித்த எலியின் உடலில் இந்த மருந்தை செலுத்திய போது 5 நாட்களில் வைரசின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்ததாகவும் இந்த வருட இறுதியில் இந்த மருந்து தயாராகி விடும் எனவும் சீன பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.