மலேரியா தடுப்பு மருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஆய்வுகளை நிறுத்திய உலக சுகாதார அமைப்பு!
மலேரியா மாத்திரை ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயன்படுத்துவது குறித்து ஆய்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் மருத்துவ இதழான லான்செட்டில் (Lancet) வெளியான ஆய்வு முடிவுகளின் படி கொரோனா தொற்று நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்குவது அவர்களை மரணத்துக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை உலக சுகாதார நிறுவனம் சார்பிலான ஆய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதன் தலைவர் டெட்ரஸ் அதனாம் ஜெப்ரெயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் மலேரிய தடுப்பு மருந்தை ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்கு ஆதரவாகவுள்ள நிலையில், பிரான்ஸ் மருத்துவர் ஒருவரும் இந்த மருந்து சிறப்பான பலனை அளிப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்.