சீனா வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பிய 2 செயற்கைக்கோள்!
சீனா புதிய முன்னணி தொழில்நுட்பங்களுடன் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியுள்ளது. சிச்சுவான் மாகாணத்திலுள்ள ஜிச்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் -11 கேரியர் ராக்கெட் விண்ணில் அனுப்பட்டது.
அதன் மூலம் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் புவியை கண் காணிக்கும் புதிய முன்னணி தொழில்நுட்ப செயற்கைக் கோள்கள் இரண்டும் பொருத்தப்பட்டன. இந்த திட்டப் பணி முழுவதும் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக ஏவுதள மைய நிர்வாகி டோங் சோங்கிங்(Dong Chongqing) தெரிவித்துள்ளார்.