பிரேசிலில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 1,262 பேர் பலி..!!
ஒரே ஒரு நாளில் மட்டும் பிரேசிலில் 1262 பேர் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,199 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (செவ்வாய்) மாலை இதை அறிவித்த பிரேசிலின் சுகாதார அமைச்சகம், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,55,383 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைவாக உள்ளது என்று அந்நாட்டு ஜனதிபதி ஜெயிர் போல்சோநாரோவின் தொடர் அறிவிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று அசுரர் வேகத்தில் சென்றால், 33 ,530 உயிரிழப்புகளுடன் இருக்கும் இத்தாலியை கடந்து, உலகில் 3 ஆவது அதிக மரணங்களை சந்தித்த நாடு என்ற இடத்தை பிரேசில் இடம்பெறும் என கூறப்படுகிறது.