பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மருந்துகளில் சில மாற்றம் செய்த சீனர்கள்!
சீனர்களின் பரம்பரை பரம்பரையாக மருந்துகள் தயாரிப்பு தொடர்பாக புத்தகத்தில் சில மாற்றங்களை சீன அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். வௌவாலின் கழிவைச் சேர்த்து செய்யப்படும் மருந்து ஒன்றில் இருந்து வௌவால் கழிவு நீக்கப்பட்டுள்ளதோடு முன்னர் மருந்தாக பயன்பட்ட pangolin எனும் விலங்குகள் முற்றிலுமாக அந்த புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் வௌவாலிடம் இருந்து உருவாகி, சீனர்கள் உணவாக உண்ணும் pangolin மூலமாக மனிதர்களுக்கு பரவுவதாக சில அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனர்கள் வௌவாலின் கழிவை உண்பதால் கண் பார்வை அதிகரிக்கும் என்றும், பல கண் நோய்கள் தீரும் என்றும் நம்புகின்றனர். அதேவேளை pangolin உடலிலுள்ள செதில்களை உண்டால் இரத்த ஓட்டம் மேம்படும், வீக்கம் குறையும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். குறித்த விடயங்கள் சீன மருத்துவ என்சைக்ளோபீடியாவான Ben Cao Gang Mu என்ற புத்தகத்தில் காணப்பட்டுள்ளன. தற்போது, வௌவாலின் கழிவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதோடு, Pangolinகளை காக்கும் முயற்சியில் சீன அரசாங்கம் இறங்கியுள்ளதால், இந்த இரண்டும் அந்த புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.