பிரித்தானியர்கள் போதையில் நடுவானில் விமானத்தில் செய்த மோசமான செயல்..! இதோ அதிர்ச்சி கொடுக்கும் வீடியோ..!!
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் இருந்து குரோஷியாவின், ஜாதருக்கு பயணித்த விமானத்தில் பிரித்தானியர்கள் போதை காரணமாக ரகளையில் ஈடுபட்ட சம்பவம் விமான பயணிகளுக்கு இடையில் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த ரையன்ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இருந்த அனிடா ஜுகோவ், 24, மற்றும் காதலன் பியோட்ர் நேசன், 32, ஆகியோர் விமானத்தில் நடைபெற்ற இந்த மோசமான சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். மேலும் அதில் குழுவாக மது அருந்தி போதையில் சென்ற பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர்கள், விமானத்தில் வாந்தி எடுத்து, சீட் பெல்ட் அணியாமல் சென்ற விமானக் குழுவினருடன் கத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பயணம் பற்றி ஜூகோவ் கூறியது என்னவென்றால் இந்த விமானத்தில் பயணித்த 3 மணிநேரம் நரகத்தில் இருந்தது போல் காணப்பட்டது. அவர்கள் அனைவரும் மிருகங்கள் போல நடந்து கொண்டார்கள் இசை இல்லாத இரவுகிளப் போல இருந்தது. என் வாழ்கையிலேயே மிக மோசமான விமான பயணம் இது தான் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானியர்களின் போதை காரணமாக விமானம் தாமதமாக தரையிறங்கிய நிலையில், விமானத்திற்குள் நுழைந்த குரோஷியா பொலிசார் ரகளையில் ஈடுபட்ட மூன்று பிரித்தானியர்களை கைது செய்ததாக ரையன்ஏர் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.